உலகம்

எரிசக்தி துறையினரை சந்தித்தார் பிரதமர் மோடி

எரிசக்தி துறையினரை சந்தித்தார் பிரதமர் மோடி. பெட்ரோனெட் - டெல்லூரியன் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்- ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை திரவ எரிவாயு வாங்க முடிவு

தந்தி டிவி
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்குள்ள ஹூஸ்டன் நகரில் எரிசக்தி துறையினரை சந்தித்தார். அப்போது, இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனம் அமெரிக்காவின் டெல்லூரியன் நிறுவனத்திடம் இருந்து ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை திரவ எரிவாயு இறக்குமதி செய்வது தொடர்பாக இருநிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எரிசக்தி துறை உள்ளிட்ட இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்