உலகம்

மண் போல் சரிந்த `மலை'... மாயமான தொழிலாளர்கள்...நூலிழையில் தப்பியவர்களின் அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

துருக்கியில் உள்ள தங்கக் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, அருகே இருந்த வாகனங்கள் நூலிழையில் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் எரிசின்கான் மாகாணத்தில் உள்ள பிரம்மாண்ட சுரங்கத்தில் மண், மலைகள் போல குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி 9 சுரங்கத் தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவு தொடர்பாக, சுரங்கத்தின் கள மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சுரங்கத்தில் மண் ஏற்றிச் சென்ற லாரிகள், நிலச்சரிவிலிருந்து நூலிழையில் தப்பிய டேஷ்கேம் காட்சிகள் வெளியாகியுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை