இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் அதிபராக கடந்த சில நாட்களுக்கு பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், கொழும்புவில், மகிந்த ராஜபக்சே, இலங்கையின் பிரதமராக பதவியேற்று கொண்டார். அவருக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து ராஜபக்சேவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.