உலகம்

இந்தோனேசியா தீவில் நில நடுக்கம் : ரிக்டரில் 7.5 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, பலு நகரை சுனாமி அலைகள் தாக்கின.

தந்தி டிவி

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவு பகுதியில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளி 5 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு அலறியடித்த படி வெளியேறினர். இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, 6 அடிக்கும் அதிகமாக சுனாமி அலைகள் எழுந்து பலு நகரை தாக்கியதில், மசூதி உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், தரைமட்டமானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்