உலகம்

இந்தோனேசியா தீவில் நில நடுக்கம் : ரிக்டரில் 7.5 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, பலு நகரை சுனாமி அலைகள் தாக்கின.

தந்தி டிவி

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவு பகுதியில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளி 5 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு அலறியடித்த படி வெளியேறினர். இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, 6 அடிக்கும் அதிகமாக சுனாமி அலைகள் எழுந்து பலு நகரை தாக்கியதில், மசூதி உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், தரைமட்டமானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ