வன்முறைக் களமான புரூக்ளின் சிறையில் நிக்கோலஸ் மதுரோ
அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியாவும் நியூயார்க்கின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு மதுரோ ஒரு நாளைக்கு 23 மணிநேரம் ஒரு சிறிய அறைக்குள்ளேயே அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. புரூக்ளின் சிறையானது, வன்முறை, சுகாதாரமின்மை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நரகத்திற்கு இணையான இடமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள பிற கைதிகளால் மதுரோவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, அவருக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.