நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் இந்த ஆண்டு புத்தாண்டை துபாயில் கொண்டாட அங்கே சென்று உள்ளனர். துபாயில் இருவரும் உலா வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், அங்கு கப்பலில் நடிகர் மாதவன் மற்றும் அவருடைய மனைவியுடன், நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 2025ல் நயன்தாரா வசம் 8 படங்கள் உள்ளதால் இந்த புத்தாண்டு அவருக்கு கூடுதல் ஸ்பெஷலாக அமையுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.