உலகம்

வீட்டில் தங்க ஆபரணங்களை புதைத்த விடுதலைப்புலிகள்? நீதிமன்ற உத்தரவின்பேரில் தோண்டும் பணி தொடக்கம்

தந்தி டிவி

விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்க ஆபரணங்களை புதைத்து வைத்ததாக கருதப்படும் வீட்டை தோண்டும் பணி தொடங்கி உள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, கிளிநொச்சி அடுத்த தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்க ஆபரணங்களை புதைத்து வைத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், போலீஸ் பாதுகாப்போடு அந்த வீட்டை தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முழுவதும் தோண்டிய பின்னர் தான் ஆபரணங்கள் புதைக்கப்பட்டதா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை