பயங்கர நிலச்சரிவு - கண்முன்னே மண்ணோடு மண்ணாக புதைந்த கட்டிடங்கள்.. பதைபதைக்கும் காட்சி
தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள பெங்ஷூய் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு தொடர்பான அதிர்ச்சிகரமான காட்சிகள் வெளியாகியுள்ளன. வூஜியாங் ஆற்றங்கரையோரம் இருந்த மலைப்பகுதி திடீரென சரிந்து விழுந்ததில், அங்கிருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கின. நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பாறைகள் உருள்வதைக் கண்ட உள்ளூர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இடிபாடுகளுக்குள் இருந்து 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.