Israel | Lebanon | United Nations | இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் ஐ.நா. நிர்வாகிகள் 3 பேர் பலி #Israel #Lebanon #UN #Netanyahu இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில், கடந்த 24 மணிநேரத்தில் தெற்கு லெபனானில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூன்று ஐ.நா. சபை நிர்வாகிகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனானுக்கான ஐ.நா. இடைக்காலப் படை (UNIFIL) இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.