காசா மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டு இருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமாக அவர், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையேயான போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக தெரிவித்து இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலையில், இந்த அறிவிப்பை அடுத்து ஹமாஸ் குழு மீது இஸ்ரேல் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதனால், காசாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.