ஹிஸ்புல்லா அமைப்பின் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ள லெபனான் அரசு, ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க லெபனானின் தலைநகரான பெய்ரூடின் தெற்கு பகுதியை கூறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்த நிலையில், லெபனான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகத்தின் தலைவரான ஹுசைன் மக்லெட்டை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.