இஸ்லாமிய புரட்சியின் 47வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வன்முறையாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பது, ஈரான்மீது இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.