ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தகோரி நூற்றுக்கணக்கானோர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி பேரணி நடத்தப்பட்டதால், கண்ணீர் புகை குண்டுகள், வீசப்பட்டன. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.