இஸ்ரேல் தாக்குதலில் கொத்து கொத்தாக மடிந்த ஈரான் மக்கள் - உயரும் பலி எண்ணிக்கை
ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 865ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக்கூறி, கடந்த 13ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 865 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 ஆயிரத்து 396 பேர் காயமடைந்ததாகவும், மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.