ஈரான் தாக்குதலில் கத்தாரில் 16 பேர் காயம் ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் கத்தாரின் தலைநகரான தோஹாவில் 16 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் 65 ஏவுகணைகளையும் 12 ட்ரோன்களையும் தாங்கள் இடைமறித்து தாக்கியதாக கத்தார் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் படிப்பதற்கும் , முடிந்தவரை தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.