ஈரான் போரால் உலகளவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஈரான் போர் தீவிரமடைந்தால் உலகளவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் நீடித்தால், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் அதிகரித்து, வரும் ஆண்டில் நான்கு கோடியே ஐம்பது லட்சம் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.. உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தடைப்பட்டதால், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து, உலக அளவில் உணவு பற்றாக்குறை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.