ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஈத் தொழுகையின்போது ஈரானிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகம்மது நய்னிக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது... அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நய்னி கொல்லப்பட்ட நிலையில், ஈத் தொழுகைக்கு திரண்டிருந்த மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ரமலான் நோன்பு நிறைவடைந்ததை ஒட்டி ஈத் அல்-பித்ர் கொண்டாடப்பட்ட நிலையில், ஈரானில் பாரசீக புத்தாண்டான நவ்ரூஸும் அனுசரிக்கப்பட்டது.