டிரம்ப் எச்சரித்த மறுநாளே இஸ்ரேலின் முக்கிய இடத்தை சிதைத்த ஈரான்
இஸ்ரேல் மற்றுஅம் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய இஸ்ரேல் பகுதியில் ஏவுகணை பாகங்கள் விழுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பெட்டா திக்வா (Petah Tikva) பகுதியில், ஈரான் ஏவிய ஏவுகணைகளின் சிதறிய பாகங்கள் விழுந்ததில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த மறுநாளே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஒருபுறம் போர் தீவிரமடைந்தாலும், உடனடி போர்நிறுத்தம் மற்றும் விரிவான அமைதி ஒப்பந்தத்திற்கான திட்டவரைவு இரு நாடுகளிடமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.