ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த பிறகு, இந்தியாவிற்கு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் கொண்டு வரும் வணிகக் கப்பல்கள் மற்றும் டேங்கர்களை பாதுகாப்பாக அழைத்து வர இந்திய கடற்படை இரண்டு போர்க்கப்பல் குழுக்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பல்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளும், ஆதரவும் வழங்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.