அமெரிக்காவின் கடல்சார் முற்றுகைகு எதிராக ஈரான் மக்கள் கொந்தளிப்பு ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானின் தெஹ்ரான் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் எச்சரிக்கைகள் வெறும் வெற்று முழக்கங்கள் எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், தங்களுக்கு அச்சமில்லை என உறுதிபடத் தெரிவித்தனர். பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் துறைமுகங்களில் இருந்து வெளியேறும் கப்பல்களைத் தடுக்கும் பணியை அமெரிக்க ராணுவம் தொடங்கியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அமைதி முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறார். இருப்பினும், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.