உலகம்

ஈரானில் கால்பந்து அரங்கில் பெண்களுக்கு அனுமதி

ஈரான் நாட்டில் கால்பந்து அரங்கில் போட்டிகளை காண ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தந்தி டிவி

ஈரான் நாட்டில் கால்பந்து அரங்கில் போட்டிகளை காண ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் போட்டிகளை நேரில் காண பெண்களுக்கு ஈரான் அரசு தடை விதித்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தடையை விலக்க கோரி பெண் ரசிகை ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட பிஃபா, ஈரான் அரசை கடுமையாக எச்சரித்து பெண்கள் போட்டிகளை நேரில் காண அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. தற்போது கம்போடியா - ஈரான் அணிகள் மோதும் போட்டியை காண பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது ஈரான் அரசு

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்