ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஏர் மாடல் வடிவமைப்பில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிதூர் சவுத்ரி ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார். ஐபோன் ஏரின் வளர்ச்சியில் அபிதூர் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் ஆப்பிளில் இருந்து விலகிய அவர் ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிதூரின் பணி விலகல் ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பாகவே பார்க்கப்படுகிறது.