உலகம்

இலங்கைக்கு ரூ.3,730 கோடி கடனுதவி வழங்கும் இந்தியா

இலங்கைக்கு 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

இலங்கைக்கு 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிடம் இருந்து இலங்கை 7 ஆயிரத்து 391 கோடி ரூபாய் கடனுதவி கோரிய நிலையில், பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கைக்கு இந்தியா 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ