உலகம்

வானிலே பறிபோன கணவன் உயிர்... துபாயில் சிக்கிய மனைவி... பெண்ணின் கண்ணீர் ட்வீட் - உடனே வந்த பதில்

தந்தி டிவி

தொழில் முனைவராக இருக்கும் வித்யா மாதவன் என்ற பெண்மணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் தனது மாமா காலமானதாகவும், துபாயில் உள்ள தனது அத்தை அங்கிருந்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே சிக்கித் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மாமாவின் உடலை விரைவில் திருவனந்தபுரத்திற்குச் எடுத்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவிகள் தேவை எனவும் கூறி, மத்திய வெளி விவகார அமைச்சகத்தை டேக் செய்து வித்யா மாதவன் பதிவிட்டுள்ளார்.

அவரது கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள துபாயில் உள்ள இந்திய தூதரகம், அவரது மாமா குடும்பத்தினருடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளதாகவும், உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்கள் கிடைத்தவுடன், சடலத்தை எடுத்துச் செல்லும் பணியை துரிதப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்