இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 2வது நாள் முடிவில் பலமான நிலையில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபாரமாக விளையாடிய இளம் வீரர் தேவ்தத் படிக்கலின் ரன் வேட்டையால் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. இலங்கையின் காலேவில் நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தை மழை முடக்கியபோதும், படிக்கல் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 167 ரன்கள் விளாசினார்... இதன் மூலம் 3வது இடத்தில் களமிறங்கி 150 ரன்களை கடந்து வீரர் என்ற சாதனை பட்டியலில் டிராவிட் மற்றும் புஜாரா போன்றவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் அவருக்கு பக்கபலமாக கே.எல்.ராகுல் 82 ரன்கள், ஜூரெல் 51 ரன்கள் என கை கொடுத்ததால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் குவித்து ஆட்டத்தை தன்முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.