உலகம்

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.

தந்தி டிவி
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் கைதுசெய்யப்பட்டு தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த தீர்ப்பு, இந்தியாவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரகசிய விசாரணை அடிப்படையிலான தீர்ப்பை ஏற்க முடியாது என இந்தியா தனது எதிர்ப்பை கடுமையாக பல்வேறு நிலைகளில் பதிவு செய்தது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்