உலகம்

கனமழையால் சேதமடைந்த வீடுகளின் கூரைகள்- மழை ஓய்ந்த நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட மக்கள்

தந்தி டிவி

அர்ஜெண்டினாவில் பெய்த கனமழையால், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே, புவெனஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள கம்பனா என்ற நகரத்தில், ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக ஏராளமான வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக கொட்டிய கனமழை நேற்று ஓய்ந்த நிலையில், வீட்டின் கூரைகளை சீரமைக்கும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும் சில நாட்களுக்கு அங்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், நேற்று மழை இல்லாமல் இருந்தது மக்களை நிம்மதியடையச் செய்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்