உலகம்

கனமழையால் சேதமடைந்த வீடுகளின் கூரைகள்- மழை ஓய்ந்த நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட மக்கள்

தந்தி டிவி

அர்ஜெண்டினாவில் பெய்த கனமழையால், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே, புவெனஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள கம்பனா என்ற நகரத்தில், ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக ஏராளமான வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக கொட்டிய கனமழை நேற்று ஓய்ந்த நிலையில், வீட்டின் கூரைகளை சீரமைக்கும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும் சில நாட்களுக்கு அங்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், நேற்று மழை இல்லாமல் இருந்தது மக்களை நிம்மதியடையச் செய்தது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்