உலகம்

இந்தியாவிற்கு கூகுள் ரூ.135 கோடி நிவாரணம் - தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு

கொரோனா நிவாரணமாக இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா நிவாரணமாக இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் நிலவி வரும் மோசமான சூழலை பார்த்து பேரதிர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கிடைக்க கூகுள் ஊழியர்கள் உதவியுடன் UNICEF அமைப்புக்கு 20 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ள சுந்தர் பிச்சை, கொரோனா பற்றிய முக்கிய தகவல்களை மக்களிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்