உலகம்

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு... முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு தண்டனை

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு... முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு தண்டனை

தந்தி டிவி

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு... முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு தண்டனை

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு பன்னிரன்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில், கடந்த ஆண்டு கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை, போலீஸ் அதிகாரி ஒருவர் கழுத்தில் அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். சர்வதேச அளவில் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு மின்னசொட்டா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கழுத்தில் அழுத்திய முன்னாள் போலீஸ் அதிகாரி டெரீக் சாயுவினை, மின்னசொட்டா நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து உள்ளது. மேலும், அவருக்கு பன்னிரன்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்