உலகம்

அமெரிக்காவில் சரக்கு ரயில் விபத்து; ஆபத்தான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற ரயில் விபத்து

அமெரிக்காவில் ஆபத்தான ரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவில் ஆபத்தான ரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில், சிப்லே என்ற நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரயிலில், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அமோனியா மற்றும் ரசாயன உரங்கள் இருந்தன. விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் சிலவற்றில் தீப்பற்றியது. இதனையடுத்து ரசாயனங்கள் மூலம் அருகே வசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க, விபத்து பகுதியின் சுற்று வட்டாரங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்து நடந்த பகுதியை சுற்றி, ஐந்து சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் வசிப்பவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்