உலகம்

அமெரிக்காவில் சரக்கு ரயில் விபத்து; ஆபத்தான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற ரயில் விபத்து

அமெரிக்காவில் ஆபத்தான ரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவில் ஆபத்தான ரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில், சிப்லே என்ற நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரயிலில், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அமோனியா மற்றும் ரசாயன உரங்கள் இருந்தன. விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் சிலவற்றில் தீப்பற்றியது. இதனையடுத்து ரசாயனங்கள் மூலம் அருகே வசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க, விபத்து பகுதியின் சுற்று வட்டாரங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்து நடந்த பகுதியை சுற்றி, ஐந்து சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் வசிப்பவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை