உலகம்

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு

7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில் லண்டனில், சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பனாமாகேட் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் செரீப், 3 முறை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"