சிரியாவில், முன்னாள் அதிபர் பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அல் அசாத் ஆதரவாளர்கள், சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹோம்ஸ் (homs) நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருதரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது. இதில், பாதுகாப்பு படையை சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.