உலகம்

தமிழக மீனவர்கள் நிலை.. - இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

இலங்கை கடற்படை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டிய இலங்கை கடற்படை, சட்டவிரோத மீன்பிடிப்பை தடுப்பதற்காக, ஆபத்தான, மிகவும் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கடல் வளம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது, அதிகாரி ஒருவர் உயிரிழக்க நேரிட்டதாகவும் இலங்கை கடற்படை தனது அறிக்கையில் கூறியுள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்