இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
சுலவேசி Sulawesi தீவில் உள்ள மனாடோ MANADO என்ற இடத்தில் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. இந்நிலையில், கட்டிடத்தில் திடீரென தீப்பற்றி அங்கிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கினர். இதையடுத்து அருகில் வசித்த மக்கள், முதியவர்களில் சிலரை மீட்டனர். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததுடன், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.