உலகம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் : காந்தி சிலையை அவமதிப்பு செய்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் காந்தி சிலையை இந்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் அவமதித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளும் போராடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அப்போது காந்தியின் சிலை மீது காலிஸ்தான் இயக்கத்தின் கொடியை போர்த்தி சிலர் அவமரியாதை செய்தனர். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், உலகின் அமைதி மற்றும் நீதியின் சின்னமாக திகழ்பவரை போராட்டக்காரர்கள் அவமதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை