உலகம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் : காந்தி சிலையை அவமதிப்பு செய்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் காந்தி சிலையை இந்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் அவமதித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளும் போராடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அப்போது காந்தியின் சிலை மீது காலிஸ்தான் இயக்கத்தின் கொடியை போர்த்தி சிலர் அவமரியாதை செய்தனர். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், உலகின் அமைதி மற்றும் நீதியின் சின்னமாக திகழ்பவரை போராட்டக்காரர்கள் அவமதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்