உலகம்

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பரிசோதனைகள் - புதிய இலக்கை எட்டியது இங்கிலாந்து

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை இங்கிலாந்து கடந்துள்ளது.

தந்தி டிவி
நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை இங்கிலாந்து கடந்துள்ளது. மே 1ஆம் தேதி காலை நிலவரப்படி, அங்கு 24 மணி நேரத்தில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவைப் பொறுத்த வரையிலும் தனிமைப்படுத்துதலும் சோதனைகளை அதிகப்படுத்தலுமே தீர்வு என்பதால் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை சேர்த்து நாள் ஒன்றுக்கு 66 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் திறன் உள்ளது. இதனை 1 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்