உலகம்

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பரிசோதனைகள் - புதிய இலக்கை எட்டியது இங்கிலாந்து

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை இங்கிலாந்து கடந்துள்ளது.

தந்தி டிவி
நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை இங்கிலாந்து கடந்துள்ளது. மே 1ஆம் தேதி காலை நிலவரப்படி, அங்கு 24 மணி நேரத்தில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவைப் பொறுத்த வரையிலும் தனிமைப்படுத்துதலும் சோதனைகளை அதிகப்படுத்தலுமே தீர்வு என்பதால் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை சேர்த்து நாள் ஒன்றுக்கு 66 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் திறன் உள்ளது. இதனை 1 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்