கென்யாவில் அடுத்தடுத்து 15 யானைகள் உயிரிழப்பு கென்யாவில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 15 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் புகழ்பெற்ற அம்போசெலி பகுதியில் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரையிலான ஒரே மாதத்தில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழந்த யானைகளில் 10 யானைகளுக்கு உடலின் சில பாகங்கள் முடங்கும் அளவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு, எழுந்து நிற்கக் கூட முடியாமல் ஓரிரு நாட்களில் உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது. நைரோபி (Nairobi) பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட ஆய்வில் நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், நீர் ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்து தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன