Dubai Iran Attack | துபாயில் பதற்றத்துக்கு மத்தியில் வெளியான அறிவிப்பு.. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் மத்திய கிழக்கு பகுதியில் மூன்று நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், தற்போது துபாய் மற்றும் அபுதாபியில் பகுதி அளவில் மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி விமான வழித்தடங்கள் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால் விமான நிலையங்களுக்கு செல்வதற்கு முன்பு பயணிகள் விமான நிறுவனங்களிடம் இருந்து தங்களது விமான பயண நேர விபரங்கள் குறித்து சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.