உலகம்

டானா புயல்.. நிவாரண மையத்தில் மக்களை மகிழ்ச்சியாக்கிய நிகழ்வு

தந்தி டிவி

டானா புயல்.. நிவாரண மையத்தில் மக்களை மகிழ்ச்சியாக்கிய நிகழ்வு

ஓடிசாவில் புயல் காரணமாக நிவாரண மையங்களுக்கு இடம் பெயர்ந்த 4 ஆயிரத்து 431 கர்ப்பிணிப் பெண்களில், ஆயிரத்து 600 பேர் குழந்தை பெற்றெடுத்தனர்.

மத்திய மேற்கு, வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டாணா புயல், மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா அருகே தீவிர புயலாக கரையை கடந்தது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 5.84 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படனர். அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து அனைத்து மக்களையும் வெற்றிகரமாக வெளியேற்றி இருப்பதாக ஒடிசா முதல்வர் சரண் மாஜி கூறினார். குறிப்பாக, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 431 கர்ப்பிணிப் பெண்களில் ஆயிரத்து 600 பேர், குழந்தை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு போதுமான அளவு உலர் மற்றும் சமைத்த உணவு, மருந்துகள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்