மளமளவென பற்றிய பயங்கர காட்டுத்தீ.. எரிந்து சாம்பலாகும் அழகிய தீவு
குரோஷியாவின் கோர்சுலா தீவில் பயங்கர காட்டுத்தீ குரோஷியாவின் கோர்சுலா தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ, அங்குள்ள வனப்பகுதிகளைச் சாம்பலாக்கியது. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து நீர் விமானங்கள் மூலமாகத் தீவிரமாகத் தீயணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, கனமழை காரணமாகத் தீயின் வேகம் கணிசமாகக் குறைந்து, தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.