உலகம்

கொரோனா உயிரிழப்பை தடுக்க 3 மாதத்தில் 10,00,000 டோஸ் தடுப்பு மருந்து - சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் திட்டம்

3 மாதத்தில் பத்து லட்சம் டோஸ், கொரோனா தடுப்பு மருந்தை வழங்க திட்டமிட்டு வருவதாக சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கொரோனா தடுப்பு மருந்து முதற்கட்ட சோதனையில் நேர்மறையான முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், அதனை தயாரிக்க தேவையான அனுமதியை இங்கிலாந்தின் மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகாவிடம் இருந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதித்து பார்க்கும் நடவடிக்கை ஒரு வாரத்திற்குள் தொடங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி துவங்க உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மிகப் பெரிய அளவில் தடுப்பு மருந்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், 3 மாதத்தில் பத்து லட்சம் தடுப்பு மருந்தை இந்தியாவில் விநியோகிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு