உலகம்

"கொரோனா வைரஸ்" : தடுக்கும் வழிமுறைகளை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசை தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அவற்றை

தந்தி டிவி

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம், சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமி நாசினியை கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும். சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் மூக்கை மூடிக் கொள்வதோடு, அந்த துணியை உடனடியாக மூடிய குப்பைத் தொட்டியில் போட வேண்டும். கைகளையும் கழுவ வேண்டும். இதுபோல, காய்ச்சல் மற்றும் இருமல் உடையவர்களிடம் மிக நெருக்கமாக பழகுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கண்டிப்பாக எச்சில் துப்பக் கூடாது.

காய்ச்சலுடன் இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை உடனே அணுகுவதோடு, எந்தெந்த பகுதிகளுக்கு சென்று வந்தீர்கள் என்பதையும் அவரிடம் தெரிவிக்க வேண்டும். கால்நடை சந்தைக்கு சென்றால், அங்குள்ள விலங்கினங்களை நேரடியாக தொடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வேக வைக்காத அல்லது முழுமையாக வேகாத இறைச்சியை சாப்பிடக் கூடாது

பால் மற்றும் இறைச்சி போன்ற உணவு பொருட்களை கையாளும்போது உணவு பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.உணவு தயாரிக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும், கைகள் அழுக்காக காணப்பட்டாலும் கைகளை கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்தால் சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு