உலகம்

கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் ஒரு கோடியை எட்டும்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகளவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் ஒரு கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

உலகளவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் ஒரு கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 95 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 24 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில், அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பரவலை தடுப்பதும், உயிர்களை காப்பதும் நமது பொறுப்பு என, அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ரஸ் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை