உலகம்

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்...

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மட்டக்குளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அங்கிருந்த ஆட்டோ மீது கண்மூடித்தனமாக, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் அங்கிருந்த ஒரு பெண் உட்பட, ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் 2 போலீசார் பலியாயினர். தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் இலங்கை மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை