உலகம்

கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு - போலீஸ் குவிப்பு

இலங்கையில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதில், 2 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

இலங்கையில், யாழ்ப்பாணம், குடாக்கனை பகுதியில் வசித்து வரும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பின்னர் பிரச்சினை கலவரமாக மாறியதை தொடர்ந்து இரண்டு குழுக்கள் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர்,. அப்போது படுகாயம் அடைந்த செல்வம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,. அதேபோல் தேவராசா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்,. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி