புத்தாண்டு நாளில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து
நெதர்லாந்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆம்ஸ்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்ஸ்டர்டாம் பகுதியில் 1872 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த தேவாலயத்தில் புத்தாண்டு தினத்தன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் கட்டடம் முழுவதும் தீக்கிரையானது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.