தாய்லாந்தில் உள்ள அயூத்தியா நகரில் பள்ளி ஒன்றில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது, ஐந்து அலங்கரிக்கப்பட்ட யானைகள், பலூன், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கின. பின்னர் ஐந்து யானைகளும் நடனமாடி அசத்தியது, மாணவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.