சீனாவில் பயங்கரம் - லாரி மீது உருண்டு விழுந்த ராட்சத பாறைகள் சீனாவின் குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் உள்ள ஹெச்சி நகரில், பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையிலிருந்து பெயர்ந்து வந்த ராட்சதப் பாறைகள் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் விழுந்தன. பாறை விழுந்த வேகத்தில் லாரி முழுமையாக உருக்குலைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பியுள்ளார்.