உலகம்

"இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்" - யூனிசெஃப்

இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று குழந்தைகள் நிதி அமைப்பான யூனிசெஃப் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரசால், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் உலகமெங்கும் பெண்கள் கருத்தரிப்பது அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

* இதனால், உலகமெங்கும் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

* இந்தியாவை பொறுத்தவரை, கடந்த மார்ச் 11-ந் தேதிக்கு பின்னர் 9 மாதங்களில் இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பிறப்பு இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

* மார்ச் 11-ந் தேதி தொடங்கி டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்றும் யூனிசெஃப் அமைப்பு கணித்துள்ளது.

இதே போன்று கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனாவில் 1 கோடியே 35 லட்சம் குழந்தைகளும், நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும்,

* பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என்று யூனிசெஃப் கூறி உள்ளது.

* அமெரிக்காவில் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையிலான காலத்தில், 32 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என யூனிசெப் கணித்துள்ளது

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு