#omanattack #iranattack #iranisraelwar ஓமன் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி , 10 பேர் காயம் ஓமனின் சோஹர் நகரில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த 11 பேரில் 10 பேர் இந்தியர்கள் என்றும் அதில் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்ததாகவும், எஞ்சியவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வளைகுடா பகுதிக்கான இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அசீம் ஆர் மகாஜன் தெரிவித்துள்ளார். அங்கு இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து அனைத்து உதவியையும் வழங்கி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.